PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வளிமண்டலம் மற்றும் வளிமண்டல அழுத்ததைப் பின்வருமாறு வரையரைச் செய்யலாம்.
பூமியின் மேற்பரப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட உயரம் வரை (கிட்டத்தட்ட \(300\) கிமீ) வரை காற்று சூழ்ந்துள்ளது, மேலும் பூமியைச் சுற்றியுள்ள காற்றின் இந்த அடுக்கு வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
  • காற்று அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் அது இடத்தை அடைத்துக்கொள்ளும்; மேலும் அதற்கு எடை உள்ளது. அதை வளிமண்டல அழுத்தம் என்கிறோம்.
  • கடல் மட்டத்தில் உள்ள காற்றழுத்தத்தைத்தான் நாம் பொதுவாக வளிமண்டல அழுத்தம் என்று குறிப்பிடுகிறோம். 
தரை மட்டத்திற்கு அருகில் மற்றும் தரை மட்டத்திற்கு மேலே உள்ள அழுத்தம் மாறுபாடு கீழே உள்ள வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. துகள்கள் தரையில் நெருக்கமாக இருப்பதால், தரை மட்டத்தில் அழுத்தம் அதிகமாக இருக்கும், மேலும் தரை மட்டத்திற்கு மேல் அழுத்தம் குறைவாக இருக்கும்.  
 
 10.png
அழுத்தத்தின் மாறுபாடு  
 
அதிக உயரத்திற்குச் செல்லும் போது காற்று மெல்லியதாகிறது. எனவே, மலைகளில் ஏறும் போது வளிமண்டல அழுத்தம் குறைகிறது.
 
ஆனால், மறுபுறம், சுரங்கங்களைப் போல கடல் மட்டத்திற்கு கீழே செல்லும்போது காற்று கனமாகிறது.  
 
மனிதனின் நுரையீரல்கள் கடல் மட்டத்தில் (\(101.3\ kPa\)) சுவாசிப்பதற்கேற்ப தகுந்த தகவமைப்பைக் கொண்டுள்ளது. மலை ஏறுபவர்களுக்கு அதிக உயரத்தில் அழுத்தம் குறைவதால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் கூடிய சிறப்பு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது. கடல் மட்டத்தை விட அதிக அழுத்தத்துடன் சுரங்கங்களில் பணிபுரிபவர்களும் இதே போன்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர்.   
 
5(2).jpg
மலை ஏறுபவர்கள்  
Reference:
https://www.piqsels.com/en/public-domain-photo-jfcje