PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மனிதர்கள் உண்ணும் உணவுகளில், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற எளிமையான மூலக்கூறுகள் மட்டுமல்லாது கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்பு போன்ற சிக்கலான மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. நமது உடலானது இந்த மூலக்கூறுககளை எளிமையான பொருட்களாக மாற்றம் அடையச் செய்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த இயலும். இந்த மூலக்கூறுகளை எளிமையான பொருட்களாக மாற்றம் அடையச்
செய்யவில்லையெனில் அவற்றை நம்மால் பயன்படுத்த முடியாது.
 
YCIND20220816_4262_Human organ systems_11 (1).png
செரிமான மண்டலம் 
  
செரிமானமானது ஐந்து நிலைகளில் நிகழ்கிறது, அவையாவன:
  1. உணவு உட்கொள்ளல்
  2. செரித்தல்
  3. உட்கிரகித்தல்
  4. தன்மயமாதல்
  5. மலம் வெளியேற்றுதல்
உட்கொள்ளல்:
 
செரிமானத்தின் பணிகள் மனிதனின் வாய் வழியாக உணவானது உட் செல்லுவதிலிருந்து தொடங்குகிறது.
 
செரித்தல்:
 
செரிமான நொதிகள் நாம் உண்ணும் உணவைச் சிக்கலான, கடினமான மற்றும் கரையாத் தன்மையுடைய பொருள்களிலிருந்து சிறிய, எளிய, கரையும் மற்றும் விரவும் தன்மையுடைய துகள்களாக மாற்றுகிறது.  இந்நிகழ்வு செரித்தல் என அழைக்கப்படும்.
செரிமான மண்டலம் என்பது உணவு செரிமானம்  அடைய உதவும் உடல் உறுப்புகளின் ஒட்டுமொத்த அமைப்பே ஆகும்.
இரண்டு உறுப்புகளைச் செரிமான மண்டலம் கொண்டுள்ளது. அவை;
 
1. உணவுப்பாதை (செரிமான வழி அல்லது இரைப்பை சிறுகுடல் வழிப் பாதை):
 
உணவு செல்லும் பாதை அதாவது உணவை வாயில் உட்செலுத்துவது முதல் அவை யாவும் மலவாயில் முடிவடையும் வரையுள்ள பாதையை இது குறிக்கிறது.
 
2. செரிமான சுரப்பிகள்:
 
செரிமான மண்டலத்துடன் தொடர்புடைய சுரப்பிகள் உமிழ் நீர்ச் சுரப்பிகள், இரைப்பைச் சுரப்பிகள், கணையம், கல்லீரல் மற்றும் குடல் சுரப்பிகள் போன்றவையாகும்.