PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அணி – அழகு
 
செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது அணி எனப்படும்.
 
சொல்லாலும் பொருளாலும் அழகுபட எடுத்துரைப்பது ’அணி’ இலக்கண இயல்பாகும்.
 
உவமைஅணி
 
அணிகளில் இன்றியமையாதது உவமையணி ஆகும்.
 
மற்ற அணிகள் உவமையிலிருந்து கிளைத்தவையாகவே உள்ளன.
 
மலர்ப்பாதம் – மலர் போன்ற பாதம் இத்தொடரில் பாதத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது.
 
பாதம் - பொருள் (உவமேயம்)
  
மலர் - உவமை  
  
போன்ற - உவம உருபு
 
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
 
இதில் உவமையணி அமைந்துள்ளது.
 
உருவக அணி
 
கவிஞன், தான் ஒரு பொருளைச் சிறப்பிக்க எண்ணி, அதற்கு உவமையாகும் வேறொரு பொருளோடு ஒன்றுபடுத்திக் கூறுவான்.
 
உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறும் இத்தன்மையே ’உருவகம்’ எனக் கூறப்படும்.
 
உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி ஆகும்.
சான்று
  
இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்.
 
இப்பாடலில், இன்சொல் – நிலமாகவும், வன்சொல் – களையாகவும், வாய்மை – எருவாகவும், அன்பு – நீராகவும், அறம் - கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.