PDF chapter test TRY NOW

3 (2).png
 
  • அடுக்ககங்களில்(Apartment) வாழும் பலர் இயற்கை தரும் இன்பத்தை எண்ணி ஏங்குகிறார்கள்.
  • 'வீடு' என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் கற்பனை செய்கிறார்.
  • இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்த்துகிறார்.
  • இயற்கையைப் பல வகைகளிலும் போற்றிடும் பாரதியின் கனவு இல்லத்தைப் பற்றி அறிவோம்.

 

*காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும் – அங்குத்

தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் – அந்தக்

காணி நிலத்திடையே – ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் – அங்குக்

கேணி அருகினிலே– தென்னைமரம்

கீற்றும் இளநீரும்

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்

பக்கத்திலே வேணும்* – நல்ல

முத்துச் சுடர்போலே– நிலாவொளி

முன்பு வரவேணும் – அங்குக்

கத்துங் குயிலோசை– சற்றே வந்து

காதில் படவேணும் – என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே– நன்றாய் இளம்

தென்றல் வரவேணும். 

                                                   - பாரதியார்

 

சொல்லும் பொருளும்:


காணி - நிலஅளவைக் குறிக்கும் சொல்
மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
சித்தம் - உள்ளம்.

 
பாடலின் பொருள்:
  • காணி அளவு நிலம்வேண்டும்.
  • அங்கு ஒரு மாளிகைகட்டித்தர வேண்டும்.
  • அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.
  • நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும்.
  • இளநீரும் கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும்.
  • அங்கே முத்து போன்ற நிலவொளி வீசவேண்டும்.
  • காதுக்கு இனிய குயிலின் குரலோசைக் கேட்க வேண்டும்.
  • உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.
நூல் வெளி:
  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
  • அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
  • இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
  • எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
  • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
  • நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
  • பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
  • பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
  • பாரதியார் கவிதைகள் தொகுப்பு :
     2.தெய்வப் பாடல்கள்
     1.தோத்திரப் பாடல்கள்
     11.காணி நிலம் என்னும் தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். இயற்கை - காணிநிலம் (ப.எண். 29-31) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.