PDF chapter test TRY NOW

6.குற்றியலிகரம் :
குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
 
குறுமை என்பது குறுகிய என்று பொருள்படும்.
 
இயல் என்பது ஓசை என்று பொருள்படும்.
 
இகரம் என்பது என்னும் உயிர்க்குறில் (ஒரு மாத்திரை அளவு கொண்டது) எழுத்து.
தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவாகக் குறுகி ஒலிக்கும் இகரத்தை குற்றியலிகரம் என்பர்.
குற்றியலிகரம் இரு இடங்களில் மட்டும் வரும்.
  
இடம் ஒன்று :
நிலைமொழி இறுதியில் (ஈற்றில்) குற்றியலுகரம் வந்து, வருமொழி முதலில் கர எழுத்து வந்து இணையும் (புணரும்) போது நிலைமொழி இறுதியில் (ஈற்றில்) உள்ள குற்றியலுகரம் கரமாகத் திாியும்.
கொக்கு + யாது = கொக்கியாது
 
படகு + யாது = படகியாது
 
குரங்கு + யாது = குரங்கியாது
 
எனப்படுவது + யாது = எனப்படுவதியாது
 
தோப்பு + யாது = தோப்பியாது
 
நாடு + யாது = நாடியாது
  
இடம் இரண்டு :
 
மியா என்பது அசைச்சொல்.
 
ஓசை நயத்திற்காக வருவது.
மியா என்னும் சொல்லில் (ம் + இ = மி) இடம்பெறும் போது, தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.
கேள் + மியா = கேண்மியா
செல் + மியா = சென்மியா