PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google PlayTheory:
யார்?
யாது?
யாவர்?
எங்கே?
எங்கு?
எப்போது?
எப்படி?
எதனால்?
ஏன்?
நீதானே?
அவனோ?
கள்வனோ?
பேசலாமா?
இச்சொற்களை வாசியுங்கள்.
வினாப் பொருளைத் தரும் சொற்களாக உள்ளன.
வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று கூறுவர்.
இச்சொற்களில் சில வினா எழுத்துகள் மொழி முதலிலும்,
சில வினா எழுத்துகள் மொழி இறுதியிலும்,
சில வினா எழுத்துகள் மொழி முதலிலும், இடையிலும் இடம்பெறுவதைக் காணலாம்.
மொழி முதல் | எ, யா | எப்படி? யார்? | ஏ, யா |
மொழி இறுதி | ஆ, ஓ | அவனா?, அவனோ? | அவன் + ஆ = னா, அவன் + ஓ = னோ |
மொழி முதலும், இறுதியும் | ஏ | ஏன்?, நீதானே? | ஏ, நீதான் + ஏ = னே |
எ, யா, முதலும் ஆ, ஓ. ஈற்றும் ஏ, இருவழியும் வினா ஆகும்மே.
என்று நன்னூல் நூற்பா - 67இல் பவணந்தி முனிவர் கூறுகிறார்.
வினாவைக் கீழ்க்காணும் இரு தன்மையில் பகுக்கின்றனர்.
1. | அகவினா |
2. | புறவினா |
1. அகவினா :
என்ன?
எங்கு?
யார்?
ஏன்?
இச்சொற்களில் எ, ஏ, யா ஆகிய எழுத்துகள் வினாப் பொருளை வலியுறுத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே.
மேலும், இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளான எ, ஏ, யா ஆகிய எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தராது.
எ + ன்ன
எ + ங்கு
யா + ர்
ஏ + ன்
வினா எழுத்துகள் சொல்லுக்கு உள்ளேயே இருந்து வினாப் பொருளை உணர்த்துவதால் இது அகவினா எனப்படும்.
அகம் + வினா = அகவினா
அகம் என்பதன் பொருள் உள்ளே.
சுட்டு எழுத்துகளைப் போல சொல்லுக்கு உள்ளேயே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா என்பதை நினைவில் கொள்க.
2. புறவினா :
அவனா?
வருவானோ?
எப்படி?
எம்மரம்?
அவளா?
நின்றானா?
தருவாளா?
இச்சொற்களில் எ, ஆ, ஓ ஆகிய எழுத்துகள் வினாப் பொருளை வலியுறுத்தி வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றே.
மேலும், இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளான எ, ஆ, ஓ ஆகிய எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
அவன் + ஆ (னா?)
வருவான் + ஓ (னோ?)
எ + படி (எப்படி?)
எ + மரம் (எம்மரம்?)
அவள் + ஆ (ளா?)
நின்றான் + ஆ (னா?)
தருவாள் + ஆ (ளா?)
வினா எழுத்துகள் சொல்லுக்கு வெளியே இருந்து வினாப் பொருளை உணர்த்துவதால் இது புறவினா எனப்படும்.
புறம் + வினா = புறவினா
புறம் என்பதன் பொருள் வெளியே.
சுட்டு எழுத்துகளைப் போல சொல்லுக்கு வெளியே இருந்து வினாப் பொருளைத் தருவது புறவினா என்பதை நினைவில் கொள்க.