PUMPA - THE SMART LEARNING APP
Take a 10 minutes test to understand your learning levels and get personalised training plan!
Download now on Google Playஎடுத்துக்காட்டு உவமை அணி
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு. (கல்வி)
மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்.
மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.
இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை.
மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம்.
இடையில் ‘அதுபோல்’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால், அஃது எடுத்துக்காட்டு உவமை அணிஎனப்படும்.
இல்பொருள் உவமையணி
மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.
காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.
இத்தொடர்களில் ‘பொன்மழை பொழிந்தது போல்’, ‘கொம்பு முளைத்த குதிரை போல’ என்னும் உவமைகள் வந்துள்ளன.
உலகில் பொன் மழையாகப் பொழிவதும் இல்லை.
கொம்பு முளைத்த குதிரையும் இல்லை.
இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.