PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு.
 
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகை பாக்கள் உள்ளன.
 
யாப்பின் உறுப்புகள் குறித்துக் கடந்த ஆண்டில் கற்றதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
 
பாக்களுக்கு உரிய ஓசைகளைப் பற்றி முதலில் அறிந்துகொள்வோம்.
 
பாக்களை ஓசைகளைக் கொண்டே அறியலாம் .
 
ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது.
 
ஓசையானது செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று நான்கு வகைப்படும்.
 
செப்பல் ஓசை
 
செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.
 
அகவல் ஓசை
 
அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது.
 
இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.
 
சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் , மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.
 
துள்ளல் ஓசை
 
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.
 
தூங்கல் ஓசை
 
தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.
 
முன் வகுப்பில் கற்ற ஏழு வகைத் தளைகளையும் நீங்கள் நினைவுகூர்தல் நல்லது.
 
பா வகைகள் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.
 
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.
 
இனி வெண்பா, ஆசிரியப்பா ஆகியவற்றின் பொது இலக்கணத்தை அட்டவணையில் காணலாம்.
  
பொது இலக்கணம்
வெண்பா
ஆசிரியப்பா (அகவற்பா)
ஓசை
செப்பல் ஓசை பெற்று வரும்அகவல் ஓசை பெற்று வரும்
சீர்
ற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
தளை
யற்சீர்வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும்.  ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
அடி
ரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும். (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.) மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
முடிப்பு
ற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.