PDF chapter test TRY NOW

நாம் வாழும் உலகில், விலங்குகள் மற்றும் தாவரங்கள் இரண்டிலும் மிக அதிகமான பன்முகத்தன்மையை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு சமூகம் அல்லது சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து வாழும் உலகில், தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல்வேறு வகைகளாக உள்ளன. ஒவ்வொரு தாவரமும் விலங்குகளும் தனித்துவமானவை. அவைகளுக்குள்ளே பல  வேறுபாடுகளும்  உள்ளன.
 
பல்லுயிர் - "உயிர்" என்றால் வாழ்க்கை , மற்றும் "பன்முகத்தன்மை" என்பது வேறுபட்ட அல்லது வகைகள் என்று பொருள் தரும்.
 
shutterstock_2134370305.jpg
சவன்னா சுற்றுச்சூழல் அமைப்பு
பல்லுயிர் பெருக்கம் என்பது காடுகள்  மற்றும் வீடுகளில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை, உயிர்த்தொகை உயிரியல் சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மொத்தத்தைக் குறிக்கிறது.
பல்லுயிர்த்தன்மையை, உயிரினங்கள் அதன் பல்வேறு வாழ்விடங்களால் கொண்டுள்ள  மாறுபாடுகளைப் பொருத்தும் வரையறுக்கலாம்.
  
பல்லுயிர்த்தன்மை என்பது பாலைவனங்கள், காடுகள், மலைகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் விவசாய வயல்களில் ஏற்படும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கியது.
 
biodiversitypng.png
பல்வேறு சுற்றுசூழல்கள்
 
ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும், உயிரினங்கள் ஒன்றுக்கொன்றும் மற்றும் பிற விலங்குகள், தாவரங்கள், காற்று, நீர் மற்றும் மண் ஆகியவற்றைச் சார்ந்ததுமான ஒரு சமூகத்தை உருவாக்குகின்றன. அதோடு அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளிலும், மனிதர்கள் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது.
 
உயிர்க்கோளமானது பூமியில் உயிர் வாழும் மற்றும் உயிரற்ற அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியது. உயிர் கோளத்தில் உள்ள வளங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
  1. உயிர்க் காரணிகள்  அல்லது வாழும் சமூகம் - உயிர்க் காரணிகளில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அடங்கும்.
  2. உயிரற்ற காரணிகள் அல்லது உயிரற்ற சமூகம் - உயிரற்ற கூறுகளில் காற்று, நீர், நிலம், ஒளி, வெப்பம் மற்றும் மண் ஆகியவை அடங்கும். இந்த காரணிகள் உயிர்க்கோளத்தில் உயிர் வாழ்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் ஒரு உயிரினத்தின் திறனைப் பாதிக்கும் கூறுகளாக உள்ளன.
Design - YC IND.png
உயிர் மற்றும் உயிரற்ற காரணிகள்