PDF chapter test TRY NOW

காற்றின் தன்மைகளை பின்வருமாறு அறியலாம்,
  1. இடத்தை ஆக்கிரமிக்கும்.
  2. நிறம் கிடையாது.
  3. கண்ணுக்குத் தெரியாது.
  4. தண்ணீரில் கரையும் தன்மைக் கொண்டது.
  5. சுவையற்றது.
  6. மணமற்றது.
  7. காற்றினை அழுத்தத்திற்கு உட்படுத்த முடியும்.
செயல்பாடு 1: காலி பாட்டில் சோதனை
  • ஒரு காலி கண்ணாடி பாட்டிலில் வெறும் கண்ணால் காணும்போது எதுவும் கண்ணுக்குத் தெரியாது. உள்ளே எதுவும் இல்லை என்றே நினைப்போம். 
  • ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி பாட்டிலின் வாய்ப்பகுதியை உள்ளே அழுத்தவும்.
  • பாட்டிலின் உள்ளே நீர் போகாது.
  • அதையே பாட்டிலை லேசாக சாய்த்து வைத்தால் அப்போது நீர் உள்ளே போகும்.
  • மேலும் காற்று குமிழிகள் வெளியேறும்.
  • பாட்டில் காலியாக இல்லை. உள்ளே காற்று உள்ளதால் தான் அதை தலைகீழாக தண்ணீரில் அமிழ்த்தியபொழுது உள்ளே நீர் போகவில்லை.
  • அதனை சாய்த்து பொழுது காற்று வெளியேறி உள்ளே நீர் புகுந்தது.
101w1030.png
காலி பாட்டில் காற்று சோதனை
 
விளைவு
  • காற்று குமிழிகள் வெளியேறுவதன் மூலம் நாம் பாட்டிலில் காற்று இருந்ததை அறிய இயலும்.
  • காற்று வெற்றிடத்தை அடைத்துக் கொள்வதால் நம்மைச்சுற்றி எங்கும் காற்று உள்ளது என அறியலாம்.