PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உங்களுக்கு தெரியுமா?
 
வாணியும் ரவியும் காய்கறி சந்தைக்குச் சென்றனர். பலவகையான கவர்ச்சிகரமான வண்ணங்களில் புதிய பச்சை காய்கறிகளை அவர்கள் பார்த்தார்கள். வாணி தக்காளி, முட்டைக்கோஸ் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை வாங்கினார். ரவி வாணியிடம் "இங்குள்ள அனைத்து காய்கறிகளும் மண்ணின் மேல் வளருமா?" என்று கேட்டார். வாணி இல்லை என்று பதிலளித்தார்.
 
மேலும் காய்கறிகள் மட்டுமல்லாமல், சில தண்டுகள், சில வேர்கள். சில பூக்கள் கூட சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ரவி, செடியின் வெவ்வேறு பகுதிகள் சமலையலுக்குத் தேவையான பொருட்களாகப் பயன்படுவதை அறிந்து ஆச்சரியமடைந்தார்.
 
வீடு திரும்பியப் பிறகு அவர்கள் பையிலிருந்த அனைத்து காய்கறிகளையும் தண்டு, வேர் மற்றும் பூவிலிருந்து வந்தவை என வரிசைப்படுத்தினர். வாணி, தோட்டத்திலிருந்து மருத்துவ மதிப்பு மற்றும் நறுமணத்தை சேர்க்கும் கீழாநெல்லி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளைச் சேகரித்து, இந்த இலைகளை சமையலில் பயன்படுத்துவதன் நோக்கத்தை கூறினார்.
 
எடுத்துக்காட்டாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள தாவரப் பகுதிகளைப் ஆராய்ந்து பார்க்கலாம்.
 
sugarcane-5388614_1280.jpg
 
இது கரும்பு ஆகும். இது தண்டின் தாவரப் பகுதி ஆகும்.
 
ginger-1960613_1280.jpg
 
இது இஞ்சி ஆகும். மேலும், தண்டின் தாவரப் பகுதி ஆகும்.
 
white-cabbage-2705228_1920.jpg
 
மேலே, உள்ளது முட்டைகோஸ் ஆகும். மேலும், இது இலை தாவரப் பகுதி ஆகும்.
 
cabbage-957778_1280.jpg
 
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது காலிஃபிளவர் ஆகும். மேலும், இது இலை தாவரப் பகுதி ஆகும்.
 
white-radish-2934281_1920.jpg
 
இதன் பெயர், முள்ளங்கி எனும் காய் ஆகும். மேலும், இது வேர் தாவரப் பகுதி ஆகும்.