PDF chapter test TRY NOW

விலங்குகளைப் பாதுகாத்தல் என்பது மனிதர்கள் எவ்வாறு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களையும் பாதுகாப்பதற்கு இணையாக விலங்குகளையும் பேணுதல் வேண்டும். அவைகளும் மனிதர்கள் போன்று உயிரிகளாகும். இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பிறரிடமிருந்து பாதுகாப்பது,பேணுதல் மற்றும் மேலாண்மை செய்வது  மனிதர்களாகிய நமக்கு மிகப் பெரிய கடமை உள்ளது.
இந்தியாவில் சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்ப வெப்பநிலை மாற்றம் சார்ந்த அமைச்சகம், \(1960\ \)ஆம் ஆண்டு விலங்குகளைப் பாதுகாக்க புதிய நான்கு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த  சட்டங்கள் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், விலங்குகளை சந்தையில் விற்பனை செய்பவர்கள், செல்லப் பிராணிகள் மற்றும் மீன்கள் வளர்ப்பவர்கள் போன்றவர்களுக்காக கொண்டு வரப்பட்டது.
 
பல்வேறு குழுக்களின் முயற்சியால் தான் விலங்குகளைப் பிறரிடமிருந்து காத்தல், பேணுதல் பராமரிக்க வேண்டும் என்று அரசு இச்சட்டங்களை உருவாக்கியது. நம் சுற்றுச் சூழலையும் நம்மையும் பாதுகாக்க நம்முடன் வாழும் விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். ஆகையால் நாம் விலங்குகளின் மீது அக்கறை, அன்பு கொண்டு குடும்பத்திலுள்ள ஓர் உறுப்பினர் போல் பேணிக்காக்க வேண்டும்.
 
cows13208711280.jpg
கால்நடை வளர்ப்பு
 
Important!
விலங்கு வளர்ப்பு என்பது விலங்கியலின் ஒரு கிளைப்பிரிவாகும். விலங்குகளின் இனப்பெருக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்தல் மற்றும் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவிற்கு விலங்கு வளர்ப்பு (Animal Husbandry) என்று பெயர்.
ஆடைக்காகப் பயன்படுத்தப்படும் விலங்குகள்:
 
கம்பளி ஆடைகள் மற்றும் சில தோல் பொருட்கள் உற்பத்தியில் விலங்குகளின் தோல் பயன்படுத்தப்படுகிறது.
Example:
  • ஆல்பாக்கா, பைபர், கேஷ்மீரே, மோகிர் மற்றும் ஆட்டுக்குட்டிக் கம்பளி ஆகியவை கம்பளி வகைகள்.
  • எரிப்பட்டு, மூகா மற்றும் சிலந்தி பட்டு ஆகியவை பட்டு வகைகள்.
leather7682301280w1280.jpg
தோலால் செய்யப்பட்ட உடை