PDF chapter test TRY NOW

பட்டுப்பூச்சிகளை வளர்த்து அதிலிருந்து பட்டு தயாரிக்கும் நிகழ்வு பட்டுபுழு வளர்ப்பு (Sericulture) எனப்படும். இது அதிக எண்ணிக்கையில் பட்டு இழைகளை உற்பத்தி செய்வதற்காக ஏராளமான பட்டுப்பூச்சிகளை வளர்க்கும் முறை ஆகும்.
அகிம்சைபட்டு: 
 
பல ஆண்டு காலமாகக் கூட்டுப் புழுக்களை கொதி நீரில் இட்டு, அதை கொன்று அதிலிருந்து பட்டு இழைகள் பெறப்பட்டன. இந்தியாவில் \(1992\) ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரி குசுமா ராஜய்யா என்பவர், கூட்டுப்புழுக்களை அழிக்காமல் அதிலிருந்து பட்டு நூலை பெறலாம் என்பதைக் கண்டுபிடித்தார். அதனால் மென்மையான முறை ஒன்றை உருவாக்கினார்.
 
கூட்டுப்புழுக்கள் வளர்ந்து கூட்டை கிழித்து கொண்டு வெளியே வரும் போது அவற்றை அழிக்காமல் அவை உற்பத்தி செய்யும் பட்டு இழைகளை எடுக்கலாம் என்றார். இந்தப் பட்டு, மனித நேயத்துடன் பராம்பரிய முறைகளைக் கடந்து உருவாக்க கூடியது எனவே இவை அகிம்சைபட்டு அல்லது அமைதிபட்டு என்று அழைக்கப்படுகிறது.
 
இவரைப் பின்பற்றி, அகிம்சை பட்டு உற்பத்தியில் எந்த விலங்குகளும் பாதிக்கப்படுவதில்லை அல்லது கொல்லப்படவில்லை. விலங்குகளின் நலனில் அக்கறை காட்டும் ஏராளமான மக்கள் இம்முறை பட்டு உற்பத்தியில் ஆர்வம் காட்டினார்கள்.
 
Cutcocoon.jpg
கூட்டுப்புழுக்கள்
  
உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்குகள்:
 
மனிதன் ஒரு விலங்கின் உடலிலிருந்து பெறப்படும் தசைக்காகவும் மற்றும் பிற பொருள்களாகவும் அதைப் பயன்படுத்துகிறான்.
Example:
இறால், நண்டு, பனீர், பாலாடைக்கட்டி, மீன், பால் போன்றவை விலங்கு உணவுகளாகும்.
FotoJet14.png
விலங்கு உணவுகள்
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Cut-cocoon.jpg
https://www.shutterstock.com/image-photo/animal-protein-food-stone-table-meat-624558401