PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு ரப்பர் பந்தினை எடுத்துக்கொண்டு அதனுள் நீரை நிரப்பவும்.
 
பந்தின் புறப்பரப்பில ஊசி கொண்டு வெவ்வேறு இடங்களில் சிறு துளைகளை இடவும்.
 
இப்பொழுது, பந்தை அழுத்தி என்ன நிகழ்கிறது என்று உற்று நோக்கவும்.
 
YCIND20220725_4113_Force and Pressure_4.png
பந்தின் அனைத்துத் துளைகளின் வழியாகயும் ஒரே அளவு நீர் அனைத்துத் திசைகளிலும் வெளியேறுவதை நீங்கள் காணலாம்.
இதற்குக் காரணம், திரவத்தின் ஒரு புள்ளியில் செயல்படுத்தப்படும் அழுத்தம் அனைத்துத்திசைகளிலும் சமமாக பரவுவதே ஆகும்.
 
பிரெஞ்ச் அறிவியல் அறிஞர் பிளெய்ஸ் பாஸ்கல் என்பவரால் இக்கருத்து முதன் முதலாக எடுத்துரைக்கப்பட்டது.
 
பாஸ்கல் விதி:
மூடிய அமைப்பில் ஓய்வுநிலையில் உள்ள திரவத்தின் எந்தவொரு புள்ளியிலும் அளிக்கப்படும் அழுத்தமானது அத்திரவத்தின் அனைத்துப் புள்ளிகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என்று பாஸ்கல் விதி கூறுகிறது.