PUMPA - SMART LEARNING

மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!

டவுன்லோடு செய்யுங்கள்
பொருள்கள் ஏன் நீரின் மேற்பரப்பில் மூழ்குகின்றன அல்லது மிதக்கின்றன?
 
மேலே உள்ள கேள்விக்கான தீர்வைப் புரிந்துகொள்ள ஒரு செயல்பாட்டைச் செய்வோம்.
  • ஒரு சாதாரண வெளிப்படையான கண்ணாடிக் குடுவையை தண்ணீருடன் எடுததுக் கொள்ளுங்கள்.
  • நீரின் மேற்பரப்பில் ஒரு இரும்பு ஆணி மற்றும் மரக்கட்டையை வைக்கவும்.
  • என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
3.png
இரும்பு ஆணி மற்றும் மரக்கட்டை உள்ள குடுவை
ஒரு பொருளானது கொடுக்கப்பட்ட திரவத்தில் மூழ்குவதோ அல்லது மிதப்பதோ, குறிப்பிட்ட அந்த திரவத்தின் அடர்த்தியோடு அப்பொருளின் அடர்த்தியை ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.
  • திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின், அப்பொருளானது அத்திரவத்தில் மிதக்கும்.
  • திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி அதிகமாக இருப்பின், அப்பொருளானது அத்திரவத்தில் மூழ்கும்.
இங்கே,
  • நீரை விட அடர்த்தி குறைவான மரக்கட்டை நீரில் மிதக்கும்.
  • நீரை விட அதிக அடர்த்தி கொண்ட பொருளான இரும்பு ஆணி நீரில் மூழ்கும்.