PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!
என்று பாரதத்தாயின் தொன்மையைப் பற்றிப் பாரதியார் கூறிய கருத்து தமிழ்த்தாய்க்கும் பொருந்துவதாக உள்ளது.சாலைகள் தோன்றிய பிறகே சாலை விதிகள் தோன்றியிருக்கும். அது போல இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும்.தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும். அப்படி என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் அல்லவா? இதனைக் கொண்டு தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதை உணரலாம்.
  • முதல் மனிதன் தோன்றிய இடம் என்றும் முதல் மொழி தோன்றிய இடம் என்றும் குமாிக் கண்டம் சொல்லப்படுகிறது.
  • தமிழ்மொழி தோன்றிய இடமும் அதுவே என்பது ஆராய்ச்சியாளா்கள் கருத்து.
  • உலகத்தில் தோன்றிய முதல் மொழி தமிழ் என்று அலெக்ஸ் போன்ற ஆராய்ச்சியாளா்கள் ஆதாரப்பூா்வமாக நிரூபித்துள்ளனா்.
  • இது மட்டுமில்லாமல் தமிழ் மொழியானது 20ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியிருக்கக்கூடும் என்று கணித்துள்ளனா்.
  • இவ்வுலகில் பழமையான மொழி என்றால் தமிழ், சீனம், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைச் சொல்லலாம்.
  • இவற்றில், தமிழைத் தவிர மற்ற எந்த மொழியுமே பயன்பாட்டில் இல்லை.
  • ஆனால், தமிழ்மொழியில் மட்டும் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இன்று வரை பல இலக்கியங்கள் எழுதப்பட்டு வருகிறது.
  • மக்களின் பயன்பாட்டிலும் உள்ளது.
  • உதாரணமாக சுமாா் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள தமிழன் நம்மிடம் வந்து பேசினாலும் நம்மால் புாிந்து கொள்ள முடியும்.
  • உலகத்தில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது.
  • இதனடிப்படையில் தமிழ் மூத்தமொழி என நம்மால் உணர முடிகிறது.