PDF chapter test TRY NOW

வ.எண்
ஆகுபெயர்
சான்று
  
விளக்கம்
  
1
பொருளாகுபெயர் (முதலாகுபெயர்)முல்லையைத் தொடுத்தாள்
முதற்பொருளாகிய முல்லைக்கொடி, அதன் சினை(உறுப்பு)யாகிய பூவுக்கு ஆகி வந்தது.
 
2
இடவாகுபெயர்வகுப்பறை சிரித்ததுவகுப்பறைஎன்னும் இடப்பெயர் அங்குள்ள மாணவர்களுக்கு ஆகி வந்தது.
3
காலவாகுபெயர்கார் அறுத்தான்
 
கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது.
4
சினையாகுபெயர்மருக்கொழுந்து நட்டான்
 
மருக்கொழுந்து என்னும் சினைப்(உறுப்பு) பெயர், அதன் செடிக்கு ஆகிவந்தது.
5
பண்பாகுபெயர்மஞ்சள் பூசினாள்
 
மஞ்சள்என்னும் பண்பு, அவ்வண்ணத்தில்உள்ள கிழங்குக்கு ஆகிவந்தது.
6
தொழிலாகுபெயர்வற்றல் தின்றான்
 
வற்றல்என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகி வந்தது
7
கருவியாகுபெயர்வானொலி கேட்டு மகிழ்ந்தனர்
 
வானொலி என்னும் கருவி, அதன் காரியமாகிய நிகழ்ச்சிகளுக்கு ஆகி வந்தது
8
காரியாகுபெயர்பைங்கூழ் வளர்ந்தது
 
கூழ் என்னும்
காரியம் அதன் கருவியாகிய பயிருக்கு ஆகி வந்தது
9
கருத்தாகுபெயர்அறிஞர் அண்ணாவை படித்திருக்கிறேன்
 
அறிஞர் அண்ணா என்னும் கருத்தாவின் பெயர், அவர் இயற்றிய நூல்களுக்கு ஆகி வருகிறது.
10
எண்ணலளவைஆகுபெயர்ஒன்று பெற்றால் ஒளிமயம்
 
ஒன்று என்னும் எண்ணுப்பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.
11
எடுத்தலளவைஆகுபெயர்இரண்டு கிலோகொடு
 
நிறுத்தி அளக்கும் எடுத்தல்என்னும் அளவைபெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது
12
முகத்தலளவைஆகுபெயர்அரை லிட்டர் வாங்கு
 
முகந்து அளக்கும் முகத்தல்அளவைபெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது
13
நீட்டலளவைஆகுபெயர்ஐந்து மீட்டர் வெட்டினான்
 
நீட்டி அளக்கும் நீட்டலளவைப்பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
14
உவமையாகுபெயர்நாரதர் வருகிறார்
 
நாரதர் என்னும் பெயர் அவரைக் குறிக்காமல், அவரைப்போன்ற வேறொருவர்க்கு ஆகிவந்தது
 
15
சொல்லாகுபெயர்வள்ளுவர் சொல்
வாழ்க்கைக்கு இனிது
வள்ளுவர்சொல் என்பது சொல்லைக் குறிக்காமல் பொருளுக்குப் பெயராகி வந்தது
16
தானியாகுபெயர்பாலை இறக்கு
 
பாலின் பெயரைக் குறிக்காமல் பாத்திரத்தைக் குறிக்கிறது.
 
ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் (தானி) அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானியத்திற்கு) பெயராகி வரும்.
 
இடம் பொருளுக்கு ஆகி வருவது இடவாகுப் பெயர்.
 
பொருள், இடத்திற்கு ஆகிவருவது தானியாகு பெயர்.
சொல்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறார் தொல்காப்பியர்.
 
ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும்.
 
எ.கா.
  
பூ , ஆ , தீ , வா , போ , தா
  
' பூ மலர்ந்தது ' ' மாடு புல் தின்றது '
 
மேலே உள்ள எடுத்துக்காட்டில் தனி எழுத்தும், பல எழுத்துகள் சேர்ந்த வந்த சொல்லும் உள்ளன. இவை பொருள் தருகிறதல்லவா? இந்தச் சொல்லானது ,
 
இரு திணைகளையும், ஐந்து பால்களையும் குறிக்கும்.
 
இரு திணை- உயர் திணை, அஃறிணை
 
ஐம்பால் - ஆண்பால் , பெண்பால் , பலர்பால், ஒன்றன் பால் , பலவின்பால் .
 
மூவிடங்களிலும்வரும். தன்மை , முன்னிலை , படர்க்கை.
 
உலக வழக்கிலும்( பேச்சு வழக்கு ), செய்யுள் வழக்கிலும்  வரும்.
 
வெளிப்படையாகவும்,குறிப்பாகவும்  விளங்கும்.
மூவகை மொழி
1) தனிமொழி
  
2) தொடர்மொழி
 
3)பொதுமொழி
 
ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி பலபொருளனபொது இருமையும் ஏற்பன.  (நன்னூல் - 260)
1) தனிமொழி :
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும்.
 
பிரிக்க முடியாத பகாப்பதம் அல்லது பிரிக்கக் கூடிய பகுபதமாக இது அமையும்.
 
எ.கா.
  
கண் , படி  -  பகாப்பதம்
  
கண்ணன் , படித்தான் - பகுபதம்
2) தொடர்மொழி :
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும்.
 
எ.கா . கண்ணன் வந்தான். மலர் வீட்டுக்குச் சென்றாள்.
3) பொதுமொழி :
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
 
எ.கா.
  
எட்டு - எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்
 
வேங்கை - வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும்.
 
இவையே எள் + து எனவும் ,
 
வேம் + கை எனவும்
 
தொடர்மொழிகளாகப் பிரிந்து நின்று எள்ளை உண், வேகின்ற கை எனவும் பொருள் தரும்.
 
இவை இரு பொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது.