PDF chapter test TRY NOW

பொருளின் அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு
நிலைமொழியோடு வருமொழி பொருந்தும்பொழுது, எவ்வகைப் பொருளில் பொருந்துகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியை வேற்றுமைப்  புணர்ச்சி,அல்வழிப்  புணர்ச்சி என்று இருவகையாகப் பிரிக்கலாம்.
தமிழில் வேற்றுமைகள் எட்டு. இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்று கூறப்படும்.
 
எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை என்று கூறப்படும். இவ்விரு வேற்றுமைகளுக்கு என்று தனி வேற்றுமை உருபு கிடையாது.
 
ஏனைய இரண்டு முதல் ஏழு வரையிலான ஆறு வேற்றுமைகள் ஒவ்வொன்றனுக்கும் தனித்தனி உருபுகள் உண்டு.
அவை பின்வருமாறு:
 
வேற்றுமை  உருபு
 
இரண்டாம் வேற்றுமை
 
மூன்றாம் வேற்றுமை ஆல்
 
நான்காம் வேற்றுமை கு
 
ஐந்தாம் வேற்றுமை இன்
 
ஆறாம் வேற்றுமை அது
 
ஏழாம் வேற்றுமை கண்
 
இவ்வுருபுகள் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வந்து, அப்பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவதால் வேற்றுமை எனப்பட்டன.
 
சான்று:
 
இராமன்  பார்த்தான்
  
இராமனைப்  பார்த்தான்
  
இராமனால்  பார்த்தான்.
 
நிலைமொழியும், வருமொழியும் வேற்றுமைப் பொருளில் புணரும் பொழுது, அவ்விரு சொற்களுக்கும் இடையில் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் ஆறு வேற்றுமைகளுக்கு உரிய உருபுகள் தொக்கியோ (மறைந்தோ), விரிந்தோ (வெளிப்பட்டோ) வருவது வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும்.
 
வேற்றுமைப் புணர்ச்சி ஆறு வகைப்படும்.
 
வேற்றுமை உருபுகள் தொக்கி வருவது வேற்றுமைத் தொகை எனவும், அவ்வேற்றுமை உருபுகள் தொகாது (மறையாது) விரிந்து வருவது வேற்றுமை விரி என்றும் கூறப்படும்.
சான்று:
 
வேற்றுமைத் தொகைஉருபுவேற்றுமை விரி
1. பால் குடித்தான்பாலைக் குடித்தான்
2. தலை வணங்கினான்    ஆல்   தலையால் வணங்கினான்
3. அரசன் மகன்
குஅரசனுக்கு மகன்
4. மலை வீழ் அருவிஇன்மலையின் வீழ் அருவி
5. மலை உச்சிஅதுமலையினது உச்சி
6. மாடப் புறாகண்மாடத்தின்கண் புறா
  
அல்வழிப் புணர்ச்சி
வேற்றுமைப் பொருள் அல்லாத வழியில் நிலைமொழியும் வருமொழியும் புணரும் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி எனப்படும். உயர்திணை அல்லாத திணையை அஃறிணை (அல்+திணை= அஃறிணை) என்று கூறுவதைப் போன்று, வேற்றுமைப் பொருள் அல்லாத வழி என்பதை அல்வழி என்று தமிழ் இலக்கண நூலார் கூறினர்.
 
அல்வழிப் புணர்ச்சியில்,
  
1. தொகைநிலைப் புணர்ச்சி
  
2. தொகாநிலைப் புணர்ச்சி என இரு வகைகள் உள்ளன.
வேற்றுமை ஐம்முதல் ஆறாம், அல்வழி
தொழில், பண்பு, உவமை, உம்மை, அன்மொழி,
எழுவாய், விளி, ஈர் எச்சம், முற்று, இடை,உரி
தழுவுதொடர் அடுக்கு, என ஈர் ஏழே.      -  நன்னூல் நூற்பா  - 152