PDF chapter test TRY NOW

நிலைமொழி - வருமொழி
புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது.
 
இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி நிற்கும்.
 
எனவே, இருமொழிகளுக்கு இடையே நிகழ்வதுதான் புணர்ச்சி. ஒரு சொல்லோடு ஒட்டுகளோ, இன்னொரு சொல்லோ இணையலாம்.
 
அவ்வாறு இணையும்போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு; மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு.
 
புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொறுத்து உயிரீறு, மெய்யீறு எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து உயிர்முதல் மெய்ம்முதல் எனவும் பிரிக்கலாம்.
 
புணர்மொழியின் இயல்பு
எழுத்து வகையால் சொற்கள் நான்கு வகைப்படும்
 
கலை + அழகுஉயிரீறு
மண் + குடம்மெய்யீறு
வாழை + இலைஉயிர்முதல்
வாழை + மரம்மெய்ம்முதல்
 
மேலும் இப்புணர்ச்சியை நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் நான்காகப் பிரிக்கலாம்.
 
உயிர் முன் உயிர்மண் (ண்+இ) + அடி = மணியடி 
உயிர் முன் மெய்பனி + காற்று = பனிக்காற்று
மெய்ம் முன் உயிர்ஆல் + இலை = ஆலிலை
மெய்ம் முன் மெய்மரம் + (க்+இ) கிளை = மரக்கிளை
 
இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்
புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சியை இரு வகைப்படுத்தலாம்.
 
புணர்ச்சியின்போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
 
வாழை + மரம்= வாழைமரம்
 
செடி + கொடி = செடிகொடி
 
மண் + மலை = மண்மலை
 
புணர்ச்சியின்போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
 
இந்த மாற்றம் மூன்று வகைப்படும். அவை:
 
தோன்றல், திரிதல் கெடுதல்
  
நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு (தோன்றல்)
 
கல்லூரி + சாலை = கல்லூரிச்சாலை (தோன்றல்)
 
பல் + பசை = பற்பசை (திரிதல்)
 
புறம் + நானூறு = புறநானூறு (கெடுதல்)