PDF chapter test TRY NOW

உயிரீற்றுப் புணர்ச்சி
 
உடம்படுமெய்
 
உயிரை ஈறாக உடைய சொற்களின்முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும்;
 
அப்போது சொற்கள் சேராமல் தனித்து நிற்கும்;
 
ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு ஒரு மெய் தோன்றும்.
 
இதனை உடம்படுமெய் என்று சொல்வர்.
 
நிலைமொழியின் ஈற்றில் ‘இ,ஈ,ஐ’ என்னும் உயிரெழுத்துகளை ஈறாக உடைய சொற்கள் நிற்கும்.
 
அவற்றின்முன், பன்னிரண்டு உயிர்களையும் முதலாவதாக உ டைய சொற்கள் சேரும். அந்நிலையில் யகரம்உடம்படுமெய்யாக வரும்.
 
மணி + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு
 
தீ + எரி = தீ + ய் + எரி = தீயெரி
 
ஓடை + ஓரம் = ஓடை + ய் + ஓரம் = ஓடையோரம்
 
‘இ, ஈ, ஐ’ தவிர, பிற உயிரெழுத்துகள் நிலைமொழி ஈறாக வரும்போது அவற்றின்முன் வருமொழியில் பன்னிரண்டு உயிர்களும் வந்து புணர்கையில் வகர மெய் தோன்றும்.
 
பல + உயிர் = பல + வ் + உயிர் = பலவுயிர்
 
பா + இனம் = பா + வ் + இனம் = பாவினம்
 
நிலைமொழி ஈறாக ஏ காரம் வந்து, வருமொழியில் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து புணர்கையில் யகரமோவகரமோ தோன்றும்.
 
சே + அடி = சே + ய் + அடி = சேயடி;
 
சே + வ் + அடி = சேவடி
 
தே + ஆரம் = தே + வ் + ஆரம் = தேவாரம்
 
இவனே + அவன் = இவனே +ய் + அவன் = இவனேயவன்
 
குற்றியலுகரப் புணர்ச்சி
 
வட்டு + ஆடினான் = வட் ( ட் + உ ) + ஆடினான் = வட்ட் + ஆடினான் = வட்டாடினான்
 
நிலைமொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள் வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் கெடும்.
 
வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.
 
குற்றியலுகரத்தைப் போலவே சி ல முற்றியலுகரங்களுக்கும் இவ்விரு விதிகளும் பொருந்தும்.
 
உறவு + அழகு = உற(வ் +உ) = உறவ் + அழகு = உறவழகு