PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
விலங்குகள் அளவு, வடிவம் மற்றும் நடத்தையில் வேறுபடுகின்றன. ஒரு உயிரினம் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தில், அதன் உடலை அந்த வாழ்விடத்தின் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றினால் தான் உயிர்வாழ முடியும். எடுத்துக்காட்டாக, தாவரங்கள் மற்றும் விலங்குகள் தங்கள் வாழ்விடத்தில் அல்லது சுற்றுப்புறத்தில், உயிர்வாழ்வதற்காக தங்கள் உடலில் சிறப்புப்  பண்புகள் அல்லது தனித்தன்மைகளைப்  பெற்றிருக்கின்றன.
ஒரு தாவரம் அல்லது விலங்கு ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தில் வாழ உதவும், சில பழக்கவழக்கங்களுக்குக்  காரணமான, உடலில் காணப்படும் சிறப்பு அமைப்புகளே  தகவமைப்புகள் எனப்படும்.
சில உயிரினங்களில் இருக்கும் தகவமைப்புகள் பின்வரும் கோட்பாடுகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
 
மீன்கள்:
மீன்கள்  நீர் வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளான நன்னீர் அல்லது கடல் நீரில் வாழ்கின்றன. இப்பகுதியில், மீன்கள் நீரில் வாழ்வதற்கான தகவமைப்புகளை இந்தக் கோட்பாட்டில் விரிவாகக் காண்போம்.
 
Design - YC IND (6).png
மீனின் பாகங்கள்
 
மீன்களில் இருக்கும் தகவமைப்புகள் பின்வருமாறு:
 
1. மீனின் தலைஉடல்  மற்றும் வால் ஆகியவை ஒன்றிணைந்து படகு வடிவத்தை உருவாக்குகின்றன. இத்தகைய உடல் வடிவம் நீர் எதிர்ப்பைக் குறைக்கிறது மற்றும் மீன்கள் தண்ணீரில் எளிதாகவும், வேகமாகவும் செல்ல உதவுகிறது.
 
shutterstock1388186966newjpgw300.jpg
மீனின் படகு போன்ற உடல்
 
2. செவுள்கள்  எனப்படும் சிறப்பு உறுப்புகளை மீன்கள் பெற்று உள்ளன, அவை மீன் தலையின் இருபுறமும் உள்ளன. இச்சுவாச உறுப்பு நீரில் கரைந்த ஆக்ஸிஜனை சுவாசிக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல், இவை தண்ணீரில் சுவாசிப்பதற்கான தகவமைப்புகளையும் பெற்றிருக்கின்றன. செவுள்கள், செவுள் அறையில் இருக்கும் மற்றும் அவை ஓபர்குலம் எனப்படும் மடலால் மூடப்பட்டிருக்கும்.
 
செவுள்கள் வாயு பரிமாற்றம், அயனி ஒழுங்குமுறை, சவ்வூடுபரவல், ஹார்மோன் உற்பத்தி போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. மத்தி மீனில் , செவுள்கள் உணவளிக்கும் செயல்பாட்டையும் செய்கின்றன.
 
மீன்களின் செவுள்கள் அதிக பரப்பளவைக் கொண்டுள்ளன, இவை இரத்தத்திற்கும் , சுற்றுச்சூழலுக்கும் இடையில் வாயு பரிமாற்றத்தை மேம்படுத்துகின்றன. செவுள்கள் தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சுகின்றன. கார்பன் டை ஆக்சைடு செவுள்கள் வழியாகத்   தண்ணீருக்குள் கழிவுகளாக வெளியேறுகிறது. பின்னர் நீர் செவுள்களிலிருந்து வெளியேறுகிறது.
 
3. பெரும்பாலான மீன்கள் உடலைப் பாதுகாக்கும் வழுக்கும் செதில்களைக் கொண்டுள்ளன. அவை சுற்றுச்சூழல், ஒட்டுண்ணிகள் மற்றும் வேட்டையாடுபவர்களிடமிருந்து தங்கள் உடலைப் பாதுகாக்கின்றன. தோல் அல்லது மேல்தோலின் வெளிப்புற வளர்ச்சியாகச் செதில்கள் உருவாகின்றன. செதில்கள் தண்ணீருடனான உராய்வைக் குறைக்கின்றன.
 
fishscalesw400jpg.jpg
வெவ்வேறு மீன்களில் காணப்படும் வெவ்வேறு வகையான செதில்கள்
 
4. மீன்களில் துடுப்புகள் இருப்பது நீச்சலுக்கு உதவுகின்றன. அவை இயக்கத்தின் போது ஒரு மீனின் நிலையைப்  பராமரிக்கவும், தண்ணீரில் மீன்களை வழிநடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. அவை மீன்களின் உந்துதலுக்கும் உதவுகின்றன.
 
5. திசையை மாற்றவும், தண்ணீரில் தங்கள் உடலைச்  சமநிலைப்படுத்தவும் மீன்களில் வலுவான வால் துடுப்புகள் உள்ளன. மீன் முன்னோக்கி நகரும் வகையில் தண்ணீரை இடமாற்றம் செய்வதற்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
தவளை:
நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய இரட்டை வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள உயிரினங்களை இருவாழ்விகள் என்று அழைக்கிறோம்.
தவளைகள்,  தங்கள் உடலின் வெப்பநிலையையே மாற்றக்  கூடியவை. இவை தலை மற்றும் இரண்டு சோடி கால்களுடன் கூடிய பெரிய உடற்பகுதியைப் பெற்றுள்ளன.
 
தவளையில் சுவாசிக்கும் முறை மூன்று வெவ்வேறு வழிகளில் நிகழ்கிறது.
  1. தவளைகள் இளம் உயிரி நிலையில் செவுள்கள் மூலமும்
  2. முதிர் உயிரி நிலையில் தோல், வாய்க்குழி மற்றும் நுரையீரல்கள் மூலமும் சுவாசிக்கின்றன
shutterstock_749507503.jpg
தவளை