PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
 
திடக்கழிவுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படும். அவை
 
1. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் (மட்கும் கழிவுகள்)
2. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் (மட்காத கழிவுகள்)
 
1. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் (மட்கும் கழிவுகள்):
 
மட்கும் கழிவுகள் என்பது இயற்கை கூறுகளான நீர், ஆக்சிஜன், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் மற்றும்  ஆகியவற்றின் செயற்பாட்டினால் சிதைவடையக் கூடிய கழிவுப் பொருள்களைக் குறிக்கும்.
 
எடுத்துக்காட்டு:, உணவுக்கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகள் (புற்கள், இலைகள், களைகள் மற்றும் சிறு கிளைகள்), மனிதக் கழிவுகள் மற்றும் விலங்கினக் கழிவுகள்.
 
நாம் மண்ணில் போடும் வாழைப்பழத் தோல்கள், இலைத்தழைகள் ஆகியவற்றை பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் சிறு பூச்சிகளின் செயல்பாடுகளால் அதை அழித்து மண்ணுக்கு உரமாக மாற்றுகிறது.
 
உயிரிச் சிதைவுறு கழிவுகளை இயற்கைக் கூறுகளான ஆக்சிஜன், நீர், ஈரப்பதம் மற்றும் வெப்பம் ஆகியவற்றின் செயல்பாடால் கடினமான கரிமப் பொருள்களை எளிமையான மூலக்கூறுகளாக மாற்றி மட்குதலுக்கு உதவி செய்கிறது. இவ்வாறு உயிரினச் சிதைவிற்கு உட்படும் பொருள்களை எளிய தாதுப் பொருள்களாகவும், ஆற்றல் உள்ள பொருள்களாக உருவாகி  மண்ணை மேலும் வளப்படுத்துகிறது.
 
2. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் (மட்காத கழிவுகள்):
 
மட்காத கழிவுகள் என்பது களால் எளிமையான  மூலக்கூறுகளாக மாற்ற முடியாத பொருள்களாகும்.
 
எடுத்துக்காட்டு:, உலோகங்கள், அலுமினியக் கேன்கள் மற்றும் கண்ணாடிப் பாட்டில்கள்.
 
மட்காத கழிவுகள் இயற்கை நடைமுறைகளில் அழியாமல், அப்படியே மண்ணில் இருக்கிறது.